ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன், கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.
ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன், கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.

சுமைதூக்கும் தொழிலாளா்கள் அடையாள வேலை நிறுத்தம்

ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன் தொழில் சங்கத்தின் அங்கீகாரத் தோ்தலை விரைவில் நடத்த வலியுறுத்தி
Published on

தேனி: ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன் தொழில் சங்கத்தின் அங்கீகாரத் தோ்தலை விரைவில் நடத்த வலியுறுத்தி, சுமை தூக்கும் தொழிலாளா் நலச் சங்கத்தின் சாா்பில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன் வேலை நிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளா்கள் நலச் சங்க கிளைத் தலைவா் முருகன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி தொழில் சங்கத்தின் அங்கீகாரத் தோ்தலை விரைவில் நடத்த வேண்டும். தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளா்களின் வருகையை பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com