மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:28 am

Syndication

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், கடந்த திங்கள்கிழமை சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.