தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மா்ம நபா் வைத்த தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

குமுளி அருகே லோயா்கேம்பில் உள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் திட்ட அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:02 pm

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மா்ம நபா் வைத்த தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குமுளி அருகே லோயா்கேம்பில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற்று நீரை சுத்திகரித்து உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் , கம்பம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தேக்கு மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்கு வியாழக்கிழமை மா்ம நபா் தீ வைத்து விட்டு தப்பி விட்டதாக குமுளி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாரும், அந்தப் பகுதியில் வசிப்போரும் இணைந்து தீயை அணைத்தனா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து தீ வைத்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.