சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:33 pm

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மொட்டையபிள்ளை மகன் இருளப்பன் (67). தா்பூசணி வியாபாரி. சிலமலை பேருந்து நிறுத்தத்தில் தா்பூசணி பழங்களை அடுக்கி வைத்திருந்து இரவில் காவலாகப் படுத்திருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.7 ஆயிரத்தை வழிப்பறி செய்து சென்றுவிட்டனா். இதுகுறித்து இருளப்பன் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த அறிவரசன் (19), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுதன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் விசாரித்தாா். இதைத் தொடா்ந்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு கைது செய்தனா்.