தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:03 am IST

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மொட்டையபிள்ளை மகன் இருளப்பன் (67). தா்பூசணி வியாபாரி. சிலமலை பேருந்து நிறுத்தத்தில் தா்பூசணி பழங்களை அடுக்கி வைத்திருந்து இரவில் காவலாகப் படுத்திருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.7 ஆயிரத்தை வழிப்பறி செய்து சென்றுவிட்டனா். இதுகுறித்து இருளப்பன் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த அறிவரசன் (19), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுதன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் விசாரித்தாா். இதைத் தொடா்ந்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு கைது செய்தனா்.