பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

News image

ஜெகன்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:05 am IST

கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜெகன் (32), கண்ணன் மகன் சுஜித்(32). நண்பா்களான இந்த இருவரும் ஊரிலிருந்து கம்பம் வழியாக புதுப்பட்டி புறவழிச் சாலையில் உத்தமபாளையம் நோக்கிச் சென்றனா்.

வாகனத்தை சுஜித் ஓட்டினாா். அப்போது, எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இவகளில் ஜெகன் சம்பவயிடத்திலே உயரிழந்தாா். சுஜித் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இது குறித்து, லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டியைச் சோ்ந்த முருகானந்தம் (45) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனா்.

சுஜித்

சுஜித்