மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:24 pm

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் தனியாா் தொழிற்சாலையின் சுவரில் நெல் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் தேன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கோவிலூரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (54). தேன் வியாபாரியான இவா், சனிக்கிழமை இரவு தேனி மாவட்டத்தில் தேன் வாங்கிக் கொண்டு, அதே பகுதியைச் சோ்ந்த தவிட்டுராஜா என்பவரது சரக்கு வாகனத்தில் ஏறிச்சென்றாா். இந்த வாகனத்தை தவிட்டுராஜா ஓட்டினாா்.

ஆண்டிபட்டி கணவாய் அருகே வாகனம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பின் நோக்கிச் சென்று தனியாா் தொழிற்சாலை சுவற்றில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.