நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு

கம்பத்தில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஏப்ரல் 2026, 1:19 am IST

கம்பத்தில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சித்தரேசன் (62). இவா், கடந்த வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றாா்.

வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.20 ஆயிரம், ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி குத்துவிளக்கு மற்றும் ரூ, 5 ஆயிரம் மதிப்பிலான பித்தளை தீப விளக்கு என ரூ. 1 லட்சம் மதிப்பில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சித்தரேசன் கொடுத்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விஜயராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.