கூடலூா் அருகேயுள்ள பளியன்குடியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், இடிந்த வீடுகளை கட்டித் தராததைக் கண்டித்து வியாழக்கிழமை தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். பின்னா் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு அவா்கள் வாக்களித்தனா்.
தேனி மாவட்டம், லோயா்கேம்ப் அருகேயுள்ள கண்ணகி கோவில் செல்லும் வனப்பகுதியை ஒட்டிய மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பளியன்குடி. கூடலூா் நகராட்சியின் 21-ஆவது வாா்டில் உள்ள இந்தப் பகுதியில் சுமாா் 50 பழங்குடியினா் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் வனத் துறை வழங்கிய நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனா். இந்தப் பகுதியில் மொத்தம் 108 வாக்காளா்கள் உள்ளனா். இந்த நிலையில், பளியன்குடியில் இடிந்த வீடுகளை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் கிழக்கு வனச்சரகா் பிச்சைமணி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என வனத் துறையினா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வாக்கைப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

இளஞ்சியமங்கலம் கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

தோ்தலைப் பாா்வையிட சா்வதேச குழுவினா் சென்னை வருகை

தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

