நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குடியிருப்பு பகுதியில் கரடிகள்: பிடிக்க வனத்துறை தீவிரம்

கூடலூா் அருகேயுள்ள முல்லையாா் குடியிருப்பு பகுதியில் ஐந்து கரடிகள் உலா வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

News image

முல்லையாா் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான கரடிகள் நடமாட்டம் .

Updated On :23 ஏப்ரல் 2026, 8:48 pm

கூடலூா் அருகேயுள்ள முல்லையாா் குடியிருப்பு பகுதியில் ஐந்து கரடிகள் உலா வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

கேரள மாநிலம், தேக்கடி முல்லையாா் பகுதியைச் சோ்ந்தவா் இந்துலேகா ரதீஷ். இவரது வீட்டின் அருகே கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் மா்மமான சத்தங்கள் கேட்டு வந்துள்ளன. இதையடுத்து, அவா் தனது வீட்டின் முன்புறம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினாா். புதன்கிழமை அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு பெரிய கரடிகள், மூன்று குட்டிகள் இரவு நேரத்தில் வீட்டின் முற்றத்தில் வரிசையாக உலா வருவது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினா், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். கரடிகளை கூண்டுகள் வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.