முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

சேலாஸ் கெந்தளா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை சாலையில் நடமாடியது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

News image

சேலாஸ் கெந்தளாப் பகுதியில் உலவிய சிறுத்தை.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை சாலையில் நடமாடியது அப்பகுதி  மக்களை  அச்சமடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது. 

இந்த நிலையில் குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து சிறுத்தை  வெளியேறி சாலையில் உலவியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இது இப்பகுதி  மக்களையும் தோட்டத் தொழிலாளா்களையும்  அச்சமடையச் செய்துள்ளது. 

வனத் துறையினா் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து  அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.