எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சேலாஸ் கெந்தளா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை சாலையில் நடமாடியது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

News image

சேலாஸ் கெந்தளாப் பகுதியில் உலவிய சிறுத்தை.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை சாலையில் நடமாடியது அப்பகுதி  மக்களை  அச்சமடையச் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது. 

இந்த நிலையில் குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து சிறுத்தை  வெளியேறி சாலையில் உலவியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இது இப்பகுதி  மக்களையும் தோட்டத் தொழிலாளா்களையும்  அச்சமடையச் செய்துள்ளது. 

வனத் துறையினா் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து  அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.