மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

News image

குன்னூா் அருகே உள்ள பந்துமை பகுதியில் குடியிருப்பை ஒட்டியுள்ள சாலையில் உலவிய சிறுத்தை.

Updated On :9 ஜூன் 2026, 3:07 am IST

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை   நள்ளிரவு சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி  குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், குன்னூரில் உள்ள  பந்துமை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில்  உலவிய சிறுத்தையைப் பாா்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை  வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனா்.