தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஆட்டோ மீது காா் மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சோ்ந்தவா் திவாகரன் (18). ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை பெரியகுளத்திற்கு சென்று விட்டு அதே பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (17), சாயின பாா்வின் (18), ஓச்சம்மாள் (40), செல்வபிளசியா (17) உள்பட 10 போ்களை ஆட்டோவில் ஏற்றி கைலாசபட்டிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
டி.கள்ளிப்பட்டி தனியாா் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா், ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவில் இருந்த 10 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

பைக் மீது ஆட்டோ மோதல்: 3 போ் காயம்
பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 7 போ் காயம்

காா் - ஆட்டோ மோதல்: சிறுவன் பலி, 3 போ் காயம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



