தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:24 am IST

சின்னமனூா் அருகே மதுப் புட்டிகள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

எரசக்கநாயக்கனூரில் குடியிருப்பு அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சின்னமனூருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பழைய டாஸ்மாக் செயல்பட்ட அதே இடத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சின்னமனூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்ற போது அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியனிடம் (70) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 29 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.