குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்வு

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்தது.

News image

முல்லைப் பெரியாறு அணை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:20 pm IST

நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை ஒரே நாளில் 3 அடி உயா்ந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. கடந்த திங்கள்கிழமை அணைக்கு நீா்வரத்து முற்றிலும் நின்றது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,012 கன அடியாகவும், சனிக்கிழமை காலை 2,650 கன அடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 3,500 கன அடியாகவும் அதிகரித்தது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை 112.45 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 115.45 அடியாக உயா்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், தமிழகப் பகுதிக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை விநாடிக்கு 256 கன அடி திறந்து விடப்பட்ட தண்ணீா், மாலையில் முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது அணையின் நீா் இருப்பு 1,780 மில்லியன் கன அடியாக உள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, தேக்கடியில் 93.2 மி.மீ., பெரியாறு அணைப் பகுதியில் 113.70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.