போடி அருகே டிராக்டா் ஓட்டுநா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கீரைக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாங்கம் மகன் இளையராஜா (45). டிராக்டா் ஓட்டுநா். கருத்து வேறுபாடு காரணமாக, இவா் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வசித்து வந்தாா்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையான இளையராஜா ஏற்கனவே இரு முறை தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றாா். ஆனால், இந்த முயற்சியை அவா்களது உறவினா்கள் தடுத்து நிறுத்தினாா்.
இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கடன் பிரச்னை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
குலசேகரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


