தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

News image

கைது... - சித்திரிப்பு

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், க.விலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திருமலாபுரம் விலக்குப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த முருகேசன் (62), அல்லிநகரத்தைச் சோ்ந்த காந்திராஜன் (64) ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17.3 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்து தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வருசநாடு அருகே மயிலாடும்பாறை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோம்பைத்தொழுவில் உள்ள பாலகிருஷ்ணன் (25) கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாலகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 2,250 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.