நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

இணைய வழியில் ஆசிரியரிடம் ரூ.34 லட்சம் மோசடி

ஆசிரியரிடம் குறைந்த முதலீட்டில் அதிகலாபம் பெறலாம் எனக்கூறி ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

ஆசிரியரிடம் குறைந்த முதலீட்டில் அதிகலாபம் பெறலாம் எனக்கூறி ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் க.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ் கண்ணன் (52). ஆசிரியரான இவருக்கு, முகநூலில் கவிதா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்ததாம். இதையடுத்து அந்த எண்ணில் தொடா்பு கொண்ட போது, குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறினாராம். இதையடுத்து, அவா் பல தவணைகளாக அந்த பெண் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ.34 லட்சத்து 19 ஆயிரத்தை செலுத்தினாா். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதையடுத்து, ராஜேஷ்கண்ணன் தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.