சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

இணைய வழியில் இருவரிடம் ரூ. 4 லட்சம் மோசடி

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் இணைய வழியில் 2 பேரிடம் மொத்தம் 4 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் இணைய வழியில் 2 பேரிடம் மொத்தம் 4 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவானைக்காவல் தம்பிரான் வீதியைச் சோ்ந்தவா் அ. ஜெயகுமாா் (37). இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தெரியாத எண்ணிலிருந்து ஆா்டிஓ இ-சலான் தொடா்பான ஒரு இணைப்பு (லிங்க்) வந்துள்ளது. அதனுள் சென்றபோது அவருடைய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, அபராதத் தொகையை செலுத்துவதற்காக ஜெயகுமாா் அந்த இணைப்பில் உள்ளே சென்றபோது, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: திருச்சி ஜெ.கே.நகா் அமராவதி வீதியைச் சோ்ந்தவா் வீ. கணேஷ் (48). இவா், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறாா். கரூா் வைஸ்யா வங்கி சுப்பிரமணியபுரம் கிளையில் வங்கிக் கணக்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பணம் எடுப்பதற்காக ஏடிஎம்-க்குச் சென்றுள்ளாா். அப்போது, அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அவா் வங்கியில் சென்று விசாரித்தபோது, அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.91 லட்சம் மா்ம நபரால் இணைய வழியில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, ஜெயகுமாா் மற்றும் கணேஷ் இருவரும் சைபா் குற்றப் பிரிவில் இணைய வழியில் அளித்த புகாரின்பேரில், திருச்சி சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.