மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பெண் உயிரிழப்பு

போடி அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Published On :

போடி அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி சுலோச்சனா (26). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். சுலோச்சனாவுக்கு வியாழக்கிழமை திடீரென தலைவலி ஏற்படவே, போடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றாா். வெள்ளிக்கிழமை மீண்டும் தலைவலி ஏற்படவே, போடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினாா். இதையடுத்து அன்றைய தினம் இரவு தலைவலி ஏற்பட்டு மயங்கினாா். அவரை போடி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுலோச்சனா வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.