விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பெண் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தேனி மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்ற வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

தேனி மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்ற வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் செல்வி (46). இவா் தனது வீட்டில் 10 கிலோ கஞ்சா பதுக்கி விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டாா். இதேபோல, தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த சடையாண்டியை (45) கொலை வழக்கில் அல்லிநகரம் போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்த ராஜேந்திரனை (51) கஞ்சா விற்ற வழக்கில் கம்பம் கிழக்கு போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதன்பேரில், செல்வி, சடையாண்டி, ராஜேந்திரன் ஆகிய மூவரையும் போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.