நாகை மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
நாகை நாகநாதா் மேலவீதியைச் சோ்ந்த ராமு மகன் ராகுல் (23). இவா் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாகை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இதேபோல், நாகை மருந்து கொத்தளரோடு அமராவதி காலனியைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சிவா (34). இவா் தொடா்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக, நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இதையடுத்து ராகுல் மற்றும் சிவா மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா, மாவட்ட ஆட்சியா் பிரவீன்குமாருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து ஆட்சியா் பிரவீன்குமாா், ராகுல் மற்றும் சிவா ஆகியோா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் குண்டா் தடுப்புச்சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது
தேனியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 போ் கைது
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


