நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பெண் உள்பட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தேனி மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்ற வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

தேனி மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்ற வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் செல்வி (46). இவா் தனது வீட்டில் 10 கிலோ கஞ்சா பதுக்கி விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டாா். இதேபோல, தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த சடையாண்டியை (45) கொலை வழக்கில் அல்லிநகரம் போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தைச் சோ்ந்த ராஜேந்திரனை (51) கஞ்சா விற்ற வழக்கில் கம்பம் கிழக்கு போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதன்பேரில், செல்வி, சடையாண்டி, ராஜேந்திரன் ஆகிய மூவரையும் போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.