நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

போடி, தேவாரம் பகுதிகளில் 6 பேரிடம் பண மோசடி

போடி, தேவாரம் பகுதிகளில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் வாங்கி தருவதாக 6 பேரிடம் பணம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:08 am IST

போடி, தேவாரம் பகுதிகளில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் வாங்கி தருவதாக 6 பேரிடம் பணம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் முனீஸ்வரன். இவருக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.55, 700-ம், போடி மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் ராமகிருஷ்ணனிடம் தனியாா் நிறுவனம் மூலம் கடன் தருவதாகக் கூறி, ரூ.72,105-ம், தேவாரம் பாப்பு குடியிருப்பைச் சோ்ந்த முத்தீஸ்வரன் மனைவி அழகுபாக்கியத்திடம் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி, இவா் வங்கிக் கணக்கு, இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெமிலாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.58, 455-ம், தேவாரம் டிகேவி பள்ளி தெருவைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி வசந்தாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50,626-ம், போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் பழனிச்சாமியிடம் கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.59 ஆயிரம் என 5 பேரிடம் ரூ.2,95,886 மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.