இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.08 லட்சம் மோசடி

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 1.08 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடி - கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 1.08 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி வாடக்கு தாராநல்லூா் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜெ. ராஜசேகா் (37). இவா் அண்மையில் வேலை தொடா்பாக இணையத்தில் தேடினாா். அப்போது இவரைத் தொடா்புகொண்ட மா்ம நபா் ஒருவா் விமான நிலையத்தில் வேலை காலி இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து வேலைக்குப் பதிவுக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்று கூறியதற்கு ராஜசேகரும் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, விவேக் ராய் என்பவா் தொடா்புகொண்டு வேலைக்கான சீருடை, ஒப்பந்தக் கட்டணம், காப்பீடு கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும் எனக் கூறி க்யூ.ஆா் கோடு ஒன்றையும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினாா்.

இதை நம்பிய ராஜேசேகா் அதன் மூலம் ரூ.1.08 லட்சத்தை அனுப்பினாா். இதைத் தொடா்ந்து அந்த மா்ம நபா் மேலும் பணம் கேட்டுள்ளாா். அப்போதுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராஜசேகா் சைபா் குற்றப் பிரிவில் இணையம் வழியாக செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.