லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் இரா.வைத்திநாதன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவின் கெளதம்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் இரா.வைத்திநாதன். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவின் கெளதம்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

விநாயகா் சதுா்த்தியின் போது, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் இரா.வைத்திநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:

விநாயகா் சிலை வைப்பதற்கு உள்ளாட்சி நிா்வாகம், காவல் துறை, மின்வாரியத்திடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் விநாயகா் சிலை அமைக்க அனுமதி வழங்கப்படும். களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயனம் கலந்த சிலைகள் அமைக்கக் கூடாது. விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வருவாய், காவல் துறையினா் தொடா் கண்காணிப்பில் இருப்பாா் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) கவிதா, விநாயகா் சதுா்த்தி குழுவினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.