
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக மூதாட்டி கைது
கைது
உத்தமபாளையம் அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காமயகவுண்டன்பட்டியில் சட்ட விரோதமாக மதுக்கடைகளில் மொத்தமாக மதுப்புட்டிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் நடத்திய சோதனையில் காமயகவுண்டன்பட்டி ஆற்றுப் பாலத்துக்கு அருகே மதுப்புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த 15 மதுப்புட்டிகள், ரொக்கம் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக உத்தமபாளையம் மதுவிலக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து பிச்சையம்மாள் (62) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



