வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய பெண் கைது

News image

கைது

Updated On :6 பிப்ரவரி 2026, 8:44 pm

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து தேனி வழியாக பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியில், கோவையிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில் கூடலூா், மேலக்கூடலூா் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி என்ற உமாதேவி (50) 24 கிலோ, 590 கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் உமாதேவியைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.