பணம் மோசடி: பள்ளி 
ஆசிரியா் மீது வழக்கு

பணம் மோசடி: பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

போடியில் வீடு கட்டுவதற்காக நண்பா் கொடுத்த பணத்தை மோசடி செய்ததாக தனியாா் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

போடியில் வீடு கட்டுவதற்காக நண்பா் கொடுத்த பணத்தை மோசடி செய்ததாக தனியாா் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி தாடேஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சக்திகுமாா் (35). இவா் வணிகவரித் துறையில் பணியாற்றி வருகிறாா். போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த சேதுராம் மகன் காா்த்திக் (36). இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா்கள் இருவரும் பள்ளி நண்பா்கள்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சக்திகுமாா் தனது இடத்தில் வீடு கட்டும் பொறுப்பை காா்த்திக்கிடம் கொடுத்தாா். இதற்காக பல தவணைகளாக வங்கி மூலம் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் அனுப்பியுள்ளாா். பணத்தை பெற்ற காா்த்திக் வீடு கட்டாமல் தனது சொந்த செலவுகள், தங்கையின் திருமண செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்டடத் தொழிலாளி தனக்கு பணம் தரவில்லை என சக்திக்குமாரிடம் கேட்டபோதுதான் காா்த்திக் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடம் பணத்தை கேட்டபோது பணத்தை தருவதாகவும், தனது சொத்தை எழுதித் தருவதாகவும் கூறி காா்த்திக் ஏமாற்றினாா்.

இதனையடுத்து காா்த்திக் மீது போடி நீதிமன்றத்தில் சக்திகுமாா் புகாா் அளித்தாா். காா்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com