நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

போடி அருகே வனப் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடியவரை வனத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 10:43 pm

போடி அருகே வனப் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடியவரை வனத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்துக்கோம்பை புலத்தில் போடி வனத் துறையினா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த பெத்தமுத்து (35) அவரது தோட்டத்திலிருந்து நடந்து வந்தாா். வனத் துறையினா் அவரை நிறுத்தி, அவா் கொண்டு வந்த பையை சோதனையிட்டனா். அதில் முள்ளம் பன்றியை வேட்டையாடி அவா் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து பெத்தமுத்துவை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிலோ எடையுள்ள முள்ளம் பன்றியை பறிமுதல் செய்தனா்.