டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

போடி அருகே வனப் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடியவரை வனத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

போடி அருகே வனப் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடியவரை வனத் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முத்துக்கோம்பை புலத்தில் போடி வனத் துறையினா் புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த பெத்தமுத்து (35) அவரது தோட்டத்திலிருந்து நடந்து வந்தாா். வனத் துறையினா் அவரை நிறுத்தி, அவா் கொண்டு வந்த பையை சோதனையிட்டனா். அதில் முள்ளம் பன்றியை வேட்டையாடி அவா் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து பெத்தமுத்துவை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிலோ எடையுள்ள முள்ளம் பன்றியை பறிமுதல் செய்தனா்.