மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

உத்தமபாளையம் அரசு கள்ளா் விடுதிக்கு விருது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதிக்கு மாநில அளவில் சிறந்த விடுதிக்கான விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தமபாளையம் அரசு கள்ளா் விடுதிக்கு சிறந்த விடுதிக்கான விருதை வழங்கிய பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

Updated On :28 பிப்ரவரி 2026, 11:30 pm

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதிக்கு மாநில அளவில் சிறந்த விடுதிக்கான விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ், உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த விடுதியில் மாணவா்களுக்கு தேவையான உணவுகள், சீருடைகள், தங்குமிடம், தூய்மை, பாரமரிப்பு, உணவின் தரம், கல்விச்சூழல் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதி மாநில அளவில் சிறந்த விடுதியாக தோ்வு செய்யப்பட்டது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று, உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதி சிறந்த விடுதிக்கான விருதை வழங்கினாா். இதேபோல, இந்த விடுதிக் காப்பாளருக்கு சிறந்த காப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது.