வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

தேனியில் சக தொழிலாளியை அரிவாளால் தாக்கிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் சக தொழிலாளியை அரிவாளால் தாக்கிய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், அரண்மனைப்புதூரைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் மணிகண்டன் (46), ராஜா களம், கண்ணாத்தாள் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் வினோத்குமாா் (36) ஆகிய இருவரும் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வருகின்றனா். இதில் மணிகண்டனிடமிருந்த டைல்ஸ் உபரணங்களை வினோத்குமாா் வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், மணிகண்டன் வினோத்குமாரிடம் தனது உபரகணங்களை திரும்பக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, வினோத்குமாா் மணிகண்டனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத்குமாரைக் கைது செய்தனா்.