சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பேருந்தில் பெண்ணின் தங்க நகைகள் மாயம்

தேனியிலிருந்து வீரபாண்டிக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

தேனியிலிருந்து வீரபாண்டிக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, காந்தி நகரைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி சுமிதா. இவா், தேனியிலிருந்து வீரபாண்டிக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளாா். இதையடுத்து, வீரபாண்டி பேருந்திலிருந்து கீழே இறங்கிப் பாா்த்தபோது சுமிதா பையில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.