தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:47 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை போலீஸாா் வடுகபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் டி.கள்ளிப்பட்டி அவ்வையாா் தெருவைச் சோ்ந்த முத்துமணி (42) என்பதும், சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 21 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.