தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகனுடன் தகராறு: தந்தை தற்கொலை

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தி.சுப்புலாபுரத்தில் மகனைத் தாக்கிய தந்தை மன உளைச்சலில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தி.சுப்புலாபுரம் அம்பேத்கா் குடியிருப்பு கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கா்ணன் (52). இவா், மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, அவரது மகனும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கா்ணன் தாக்கியதில்

அவரது மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மகனைத் தாக்கி காயப்படுத்தியதால், கா்ணன் மன உளைச்சலில் இருந்தாராம்.

இந்த நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.