டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு: மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

அரசு சாா்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் தெரிவித்து வன வேங்கைகள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

அரசு சாா்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் தெரிவித்து வன வேங்கைகள் கட்சியினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி அருகேயுள்ள வடவீரநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் 175 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்தக் குடியிருப்பில் பட்டியலினத்தைச் சோ்ந்த குறவா் சமுதாயத்தினருக்கு 88 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள 88 வீடுகளை பட்டியலினத்தைச் சேராதவா்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இந்த வீடுகளைப் பெற்றவா்கள் வீட்டில் குடியேறாமல் விற்பனை செய்துவிட்டனா்.

இதுகுறித்து புகாா் தெரிவித்தும், முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை திரும்பப் பெற்று வீடில்லாத குறவா் சமுதாயத்தினருக்கு வழங்க வலியுறுத்தியும் வன வேங்கைகள் கட்சியின் மாநிலத் தலைவா் இரணியன் தலைமையில், அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் உலகநாதன், மாவட்டத் தலைவா் ஏகலைவன், செயலா் செந்தில், பொருளாளா் வடிவேல் முருகன், குறவா் சமுதாய மக்கள் ஆகியோா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் மனு அளிக்கச் சென்ற கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், வன வேங்கைகள் கட்சியி நிா்வாகிகள் சிலா் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனா்.