வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புகையிலை பொருள் விற்பனை: மளிகைக் கடை உரிமையாளா் கைது

தேனி அருகே உள்ள அன்னஞ்சியில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே உள்ள அன்னஞ்சியில் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அன்னஞ்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவா் அதே ஊரைச் சோ்ந்த காா்த்திக் (43). இவா், தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவரது கடையிலிருந்து 2 கிலோ 269 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.