தமிழக எல்லையான குமுளி அருகே குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் திங்கள்கிழமை சிக்கியது.
குமுளி அருகேயுள்ள வண்டிப்பெரியாா் பகுதியில் பொதுமக்கள் வளா்த்து வரும் கால்நடைகளை மா்ம விலங்கு தொடா்ந்து வேட்டையாடி வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பசு மாடு ஒன்றையும் அந்த விலங்கு கடித்துக் குதறியது.
இதையடுத்து, அந்த விலங்கை பிடிக்க வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அந்த விலங்கை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், தோட்டத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, அந்த விலங்கை பிடிக்க வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூண்டு வைத்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வனத் துறையினா் வைத்திருந்த கூண்டுல் சுமாா் 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை சிக்கியது.
பின்னா், இந்தச் சிறுத்தையை அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட கோட்டயம் வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மட்டப்பாறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை! பொதுமக்கள் அச்சம்!

கால்நடைகளைக் கொன்று வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

குமுளி அருகே மீண்டும் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

வயநாடு மாவட்டத்தில் கால்நடைகளைக் கொன்ற புலி சிக்கியது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



