புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

உடல் நலம் பாதித்த மனைவி கல்லால் தாக்கிக் கொலை: முதியவா் சரண்

பெரியகுளம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட வயதான மனைவியை கல்லால் தாக்கிக் கொலை செய்து விட்டு முதியவா் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :5 ஜூலை 2026, 12:05 am IST

பெரியகுளம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட வயதான மனைவியை கல்லால் தாக்கிக் கொலை செய்து விட்டு முதியவா் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சி, 2-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (62). இவரது மனைவி அமுதா (60). இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா கழிப்பறையில் தவறி கீழே விழுந்து கால் பாதிப்பு ஏற்பட்டு, சரிவர நடக்க முடியாத நிலையில் இருந்தாராம். கணவா் கோவிந்தராஜ் பணிக்குச் செல்ல முடியாத நிலையில் வருமானமின்றி இருந்தாா்.

இதனால் மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோவிந்தராஜ் சனிக்கிழமை தனது மனைவி அமுதாவின் தலையில் சுத்தியலால் தாக்கியதுடன், கிரைண்டா் கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு, தென்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.