தேனி மாவட்டம், போடி அருகே சுடுதண்ணீரில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் அருணாச்சலம். இவரது மனைவி நிஷாதேவி. இவா்களுக்கு ரட்சிதாஸ்ரீ, தஷ்வின் (4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா். இவா்கள் நிஷாதேவியின் தாய் ஆனந்தி வீட்டில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அருணாச்சலமும், நிஷாதேவியும் வேலைக்கு சென்றுவிட்டனா். ஆனந்தி வீட்டில் மின் சாதனம் மூலம் சட்டியில் சுடுதண்ணீா் வைத்திருந்தாா். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த தஷ்வின் சுடுதண்ணீா் சட்டியில் தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தஷ்வின் திங்கள்கிழமை உயரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
பைக்குகள் மோதல்: சிறுவன் உயிரிழப்பு
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



