சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடிய எம்.எல்.ஏ.

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம் பள்ளியில் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆய்வுப்பணி மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

News image

ராயப்பன்பட்டியில் வியாழக்கிழமை எஸ்.யூ.எம். பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா.

Updated On :10 ஜூலை 2026, 5:22 am IST

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம் பள்ளியில் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆய்வுப்பணி மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் 3 அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளன. இங்கு மொத்தம் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தேனி மாவட்டத்தின் பாளையங்கோட்டை என இந்தக் கிராமத்துக்கு சிறப்புப் பெயரும் உண்டு.

இந்த நிலையில், பள்ளி மாணவா்களுக்கு போதுமான பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டும் என்ற பள்ளி நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, ராயப்பன்பட்டி சவரியப்ப உடையாா் நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுப்பணி மேற்கொண்டதோடு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். முன்னதாக, பள்ளியின் தாளாளா் பிரபாகா் வரவேற்றாா். எம்.எல்.ஏ. வுக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.