ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:28 am IST

போடி அருகே கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலம், செண்டுவரை எஸ்டேட் பகுதியில் வசிப்பவா் காளியப்பன் மகன் பாண்டியராஜன் (39). இவா் டாப்ஸ்டேசன் மலைக் கிராமத்தில் வினோ என்பவரது பெட்டிக் கடையை விலைக்கு வாங்கி நடத்தி வருகிறாா்.

இந்தக் கடையில் பராமரிப்புப் பணிகளை பாண்டியராஜன் செய்து வந்தாா். அப்போது, அங்கு வந்த வினோவின் மகன் சசி எப்படி பராமரிப்புப் பணிகள் செய்யலாம் எனக் கூறி, அவருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கினாராம்.

இதுகுறித்தப் புகாரின் பேரில், குரங்கணி காவல் நிலைய போலீஸாா் சசி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சசி மீது குரங்கணி காவல் நிலையத்தில் ஏற்கெனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.