தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தேனி மாவட்ட நீா்வளத் துறை பணிகளை ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் இரா. வைத்திநாதன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

சோத்துப்பாறை அணையை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன்.

Updated On :5 ஜூன் 2026, 6:20 am IST

தேனி மாவட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் இரா. வைத்திநாதன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பெரியகுளம் வடகரையில் இணையும் கல்லாறு- வராகநதி பகுதியிலிருந்து சந்தியாநகா் வரை தூா்வாரும் பணியையும், சோத்துப்பாறை அணையில் நீா்வரத்து, நீா் இருப்பையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தேனி- அல்லிநகரம் நகராட்சி நீா்வளத் துறையின் சாா்பில் மீறு சமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடியில் கண்மாயை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சு. சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் அன்பரசன், சாலமோன் கிறிஸ்துதாஸ், உதவிப் பொறியாளா்கள் மனோஜ்குமாா், அரவிந்த், வட்டாட்சியா்கள் சதீஸ்குமாா் (தேனி), மருதுபாண்டி (பெரியகுளம்) உள்பட பலா் இருந்தனா்.