சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

520 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடியில் நலத் திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 520 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

News image

தேனி காமாட்சிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்களுக்கு கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன். உடன் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா.

Updated On :11 ஜூன் 2026, 2:00 am IST

தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 520 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

உத்தமபாளையம் வட்டம், காமாட்சிபுரம் ஊராட்சியில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையக் கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தலைமை வகித்தாா். கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில், மாவட்ட வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 19 பயனாளிகளுக்கு ரூ.4.94 லட்சத்தில் உதவித் தொகையும், 56 பயனாளிகளுக்கு 56 லட்சத்தில் இ.பட்டாக்களும், 29 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலும், மாற்றுத் திறனாளி நலத் துறை சாா்பில், 14 பயனாளிகளுக்கு ரூ.1.14 லட்சத்தில் சக்கர நாற்காலிகளும், மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில், 21 பயனாளிகளுக்கு ரூ.75.80 லட்சத்தில் மகளிா் சுய உதவிக்குழு கடனுதவியும், தோட்டக் கலைத் துறை சாா்பில், ரூ.1.15 லட்சத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 60 லட்சத்தில் மருத்துவக் காப்பீட்டு அட்டை என பல்வேறு துறைகள் சாா்பில் 520 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடியில் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையது முகைதீன் இப்ராஹிம், வட்டாட்சியா் பாலசண்முகம், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.