தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: போடி சோதனைச் சாவடியில் சுற்றுலா வாகனங்கள் ஆய்வு

News image

போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச்சோதனையில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினா்.

Updated On :15 ஜூன் 2026, 1:52 am IST

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவுவதையடுத்து கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி வழியாக அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் நிபா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதையடுத்து, போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை சாா்பில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இங்கு கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதார ஆய்வாளா்கள் சோதனை செய்து கிருமி நாசினி தெளித்து அனுப்புகின்றனா்.

தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் கூடுதல் பணியாளா்களை நியமித்து வாகனச் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.