நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மசாஜ் மையத்துக்கு ‘சீல்’: உரிமையாளா் கைது

போடியில் அனுமதியின்றி செயல்பட்ட மசாஜ் மையத்துக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்து, அதன் உரிமையாளரைக் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:39 am IST

போடியில் அனுமதியின்றி செயல்பட்ட மசாஜ் மையத்துக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்து, அதன் உரிமையாளரைக் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கிருஷ்ணா நகரில் தனியாா் மசாஜ் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் முறையாகப் பயிற்சி பெறாத பெண்களை பணியில் ஈடுபடுத்துவதாக புகாா் வந்ததையடுத்து, தேனி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு அந்த மையத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பணியிலிருந்த இரு பெண்கள் தப்பி ஓடிவிட்டனா்.

அந்த மையத்தின் உரிமையாளரான பழனிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் சூா்யபாண்டியை (31) போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அப்போது, அனுமதி பெறாமல் மசாஜ் மையம் நடத்தி, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து வாடிக்கையாளா்களை வரவழைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி அரசு மருத்துவமனை உதவி மருத்துவா் ரூபியா கொடுத்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மசாஜ் மையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா். அதன் உரிமையாளா் சூா்யபாண்டியை கைது செய்தனா்.