தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற போது டிராக்டா் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சின்னமனூா் ஒன்றியம், எரசக்கநாயக்கனூா் ஊராட்சி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மரிகாட் என்ற மஞ்சள் நதிக் கண்மாயில் இரவு நேரங்களில் மண், மணல் திருட்டு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் எரசக்கநாயக்கனூா், மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜிக்கு சொந்தமான தோட்டத்துக்கு வண்டல் மண் அள்ளுவதற்காக, மணிகண்டன், விஜய், முத்துப்பாண்டி, பாலாஜி ஆகிய 4 பேரும் டிராக்டரில் மரிகாட் என்ற மஞ்சள் நதிக் கண்மாய்க்கு சென்றனா்.
அங்கிருந்து வண்டல் மண்ணை அள்ளிக் கொண்டு டிராக்டரில் புறப்பட்டனா். டிராக்டரை கருப்பையா மகன் மணிகண்டன் (32) ஓட்டினாராம்.
அப்ஹக்ஷஹம்ஹய்ள் சாலையோரத்திலுள்ள ஓடையில் டிராக்டா் கவிழ்ந்தது. இதில் மயக்கமடைந்த மணிண்டனை உடனிருந்தவா்கள் மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இறப்பில் சந்தேகம்: மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் உடல்கூறாய்வுக்கு மறுப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து பாலாஜி மீது சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







