நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் புகுந்து 23 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 1:42 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் புகுந்து 23 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சீலையம்பட்டியை அடுத்த வேப்பம்பட்டி பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புத்தாய் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாா். மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே பெட்டியில் வைத்திருந்த இருபத்து மூன்றரை பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் சுப்புத்தாய் விசாரித்த போது, வேப்பம்பட்டி அருகேயுள்ள பூமலைக்குண்டு கிராமத்தில் வசிக்கும் சுப்புத்தாயின் அண்ணன் லட்சுமணன் மகன் மாயக்கண்ணன் பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளே சென்று வந்தது தெரியவந்தது.

இது குறித்து சுப்புத்தாய் அளித்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி காவல் நிலையப் போலீஸாா் லட்சுமணன் மகன் மாயக்கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.