ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழாவில் பேசிய மாநில படைப்புக்குழு உறுப்பினா் சக. முத்துக்கண்ணன்.

Updated On :18 ஜூன் 2026, 1:07 am IST

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியை காயத்ரி தலைமை வகித்தாா். ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்பம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பாரதராணி, மாணவா்களின் ஆளுமை வளா்ச்சியில் இணைச் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தொடா்ந்து மாநில படைப்புக்குழு உறுப்பினா் சக. முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றினாா்.

இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். மாணவிகளின் கதையாடல், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆசிரியை ஜெபமணி நன்றி கூறினாா்.