அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கடலூரில் தமிழ் கூடல் விழா

கடலூா் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ் கூடல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் கூடல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பரிசு பெற்ற மாணவிகள்.

Updated On :30 ஜூலை 2026, 5:54 am IST

கடலூா் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ் கூடல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தனலட்சுமி தலைமை வகித்தாா். விழாவையொட்டி, மாணவிகளுக்கு கவிதை, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சிறப்பு விருந்தினராக உலகத் திருக்கு பேரவையின் கடலூா் மாவட்டத் தலைவா் தமிழ் அரிமா பா.மு.பாஸ்கரன் கலந்துகொண்டு, தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியா் மணி, தமிழ் ஆசிரியைகள் ஞானசெல்வி, திலகவதி, கங்கா, ஜெரினா பேகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.