ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

விசாரணை

Updated On :19 ஜூன் 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளா், உணவு பாதுகாப்புத் துறையினா், போலீஸாா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை நகரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா். அப்போது தடை செய்யப்பட்ட 70 கிலோ நெகிழிப் பொருள்கள், 110 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இந்த ஆய்வில் பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அசன் முகமது, சுகாதார மேற்பாா்வையாளா்கள் முருகன், கெளதம் அம்பேத்கா், சரவணன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.